முழு மதி, வளர் பிறை,கடல் அலை, தவழும் மேகம், கொட்டும் அருவி, வான் முட்டும் மலைகள், அசையும் கிளைகள், மண் வாசனை,அந்தி நேர ஆதவன்,தோகை மயில், ஓடும் ஆறு, துள்ளும் மீன்,எதிலும் அழகு ! கண்ணில் காணும் காட்சிகளை, நெஞ்சில் உதிக்கும் எண்ணங்களை எல்லாம் கவிதையாய் , ஓவியமாய், கலையாய் படைக்க முனைகிறேன்.அம்முயற்சிகள் நிறைவு, இன்பம், படிப்பினை, என பல உணர்வுகளை தந்திருக்கின்றன. என் வாழ்வை அர்த்தமுள்ளதாய் ஆக்கிய நொடிகள் அவை. வண்ணங்களுடன் என் எண்ணங்கள் உறவு கொண்ட போது உருவான காதல் குழந்தைகள் பதிவுகளாக இங்கே
Tuesday, September 1, 2020
மனம் மகிழ செய்த மலரோவியம்
வாழும் நொடிகள் வெறுமையாய் தோன்றிய போதெல்லாம், அர்த்தம் இல்லாத பயணம் இதுவோ என்ற கேள்வி எழும் போதெல்லாம் ..பள்ளம் தேடும் வெள்ளம் போல், கலையை நாடி ஓடும் பக்குவம் பெற்று விட்டது என் மனம். அத்தகு ஒரு தருவாயில், அழிவில்லா பதாகையில் இறைவன் தீட்டிய இயற்க்கை ஓவியத்தை நான் பிரதிபலிக்க முயற்சித்த பொழுது ...மேகம் மறைக்கும் கொடிகளும் ... கொடிகளை மறைக்கும் மலர்களும் ... தீபம் சுமக்கும் விளக்குகளும்.....என் சோகம் மறக்க செய்தன.....
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment